இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூய மரியன்னையின் திரு இருதயம் (Immaculate Heart of Mary)

படம்
  தூய மரியன்னையின்  திரு இருதயம் திருப்பிலி முன்னுரை      மரியாவின் மாசற்ற இதயத்தின்மீது அளவுகடந்த இறைப்பற்றும், அன்பும் கொண்ட இறைகுலமே, கருவிலே கறையொன்றில்லா கன்னி மரியாவின் பெருமையின் அடிப்படையில் தோன்றியதுதான் மரியாவின் மாசற்ற இதய பக்தி. பாத்திமாவில் மரியா தந்த காட்சியில், 'என் மாசற்ற இதயம் வெற்றி பெறும்" என்று முன்னறிவித்தார். எனவே, இது போராட்டத்தின் நேரமல்ல, மன்றாட்டின் நேரம். மரியன்னையின் மாசற்ற இதய பக்தியை என் இதய பக்திக்கு இணையாக வைக்க நான் விரும்புகிறேன்" என்று பாத்திமா செய்தியில் குழந்தை இயேசு வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். லூசியாவிடம் மரியா பேசியதாவது, ''என் மகள் லூசியாவே, முட்களால் சூழப்பட்ட என் இதயத்தைப் பார். மீட்புக்குத் தேவையான அனைத்து அருளையும் பெற ஐந்து முதல் சனிக்கிழமைகளில் மறையுண்மைகளை தியானித்து முழு செபமாலையை என்னுடன் சேர்ந்து ஒப்புக்கொடுப்பாயா" என்று கேட்டிருக்கிறார். அந்த முட்களை ஒவ்வொன்றாக அகற்றி அக்காயத்தை நம் அன்பினால் ஆற்ற வேண்டும்.      நம் ஒவ்வொரு நினைவும், சொல்லும், செயலும் அதற்கு ஏற்றதாய் அமையவேண்டும். பாத்திமாவில...

புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா பெருவிழாத் திருப்பலி

படம்
  புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா பெருவிழாத் திருப்பலி  திருப்பலி முன்னுரை பிரியமானவர்களே! திருஅவையின் தலை சிறந்த தூண்களான புனிதர்கள் பேதுரு, பவுல் இவர்களின் திருவிழாவை கொண்டாட திருஅவை இன்று நமக்கு அழைப்பு தருகின்றது. பேதுரு தன் இனமக்களுக்கும், பவுல் பிறஇன மக்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள். இரு வேறு குணநலன்களை கொண்டிருந்தாலும், தங்களது ஆர்வத்தில் குறைவில்லாது இவர்கள் பணியாற்றி வந்தார்கள் என்பதனை இறைவாக்குகள் நமக்கு உறுதி செய்கின்றன. இருவருமே தங்களது நிலையுணர்ந்து கொண்டதால், நீரே மெசியா என்றும், அவரே என்னிலே வாழ்கின்றார் என்றும், அவரது வலிமையை பெற்றே நாங்கள் வலிமை பெறுகின்றோம் என்று உறுதியாக சொல்ல முற்பட்டார்கள். தங்களது விசுவாச உறுதிப்பாட்டை மடல்களின் வாயிலாகவும் நம்மோடு பேசி வருகின்றார்கள். இந்த பெருவிழாவிலே நாமும், கிறிஸ்து இயேசுவின் வலிமை உணர்ந்தவர்களாக, அவருக்கு நன்றியறிந்த நல்ல வாழ்வு வாழ அருள் கேட்டு மன்றாடுவோம். மன்றாட்டுகள் பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 1. திருஅவை அன்பர்கள் இந்த புனிதர்களில் இருந்த துணிவு பெற்றவர்களாக...

இயேசுவின் திரு இருதயப் பெருவிழா (ஜூன்)

படம்
  இயேசுவின் திரு இருதயப் பெருவிழா (ஜூன்) திருப்பலி முன்னுரை      இறை இயேசுவின் தூய நெஞ்ச அன்பில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே, இன்று அனைத்துலக கத்தோலிக்க திருஅவை இயேசுவின் திருஇருதயத்தின் பெருவிழாவைக் கொண்டாட அழைக்கின்றது. இயேசுவின் திருஇதயம் ஆராதனைக்கும், வணக்கத்திற்கும், புகழ்ச்சிக்கும் உரிய ஒன்றாகும். கனிவும் இரக்கமும் கொண்ட இயேசுவின் இருதய அன்பிற்கு அளவேயில்லை. மூவொரு இறைவனின் கருணை இரக்கம் ஆகியவற்றின் சாயல் இது.      திருத்தந்தையர்கள் 9ம் பத்திநாதர், 13ம் சிங்கராயர் 11ம் பத்திநாதர் ஆகியோர் இப்பக்தி முயற்சியை மிகவும் ஊக்குவித்தனர். கி.பி. 1856ல் திருத்தந்தை 9ம் பத்திநாதர் இப்பக்தியை கத்தோலிக்கக் குடும்பங்கள், குழுக்கள், துறவற சபையினர் அனைவரும் இயேசுவின் திரு இதயத்திற்குத் தங்களை அர்ப்பணிக்க அறிவுறுத்தினார். கி.பி. 1899ல் திருத்தந்தை 13ம் சிங்கராயர் இயேசுவின் திரு இதயத்திற்குப் பரிகாரம் செய்வதன் அவசியத்தைக் குறித்து எழுதிய திருமடலின் வழியாய் முதல் வெள்ளிக்கிழமைப் பக்தி பரவலாயிற்று. இயேசுவின் திருஇருதய பக்தி இவ்வுலக வாழ்வில் ஆசீர்பொழியும் ஊற்றாகவும், அ...

திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

படம்
  திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா ஜூன் 24  திருப்பலி முன்னுரை      ஆண்டவரின் வழியைச் செம்மைப்படுத்துங்கள் என்று இறைவனின் வழிக்கு அழைக்கும் திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாட இஞ்ஞாயிறு திருப்பலிக்கு அழைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களை வரவேற்கிறோம்.      ஆண்டவரிடம் கொண்ட ஆழமான விசுவாசத்தையும் அதன் ஆசீர்வாதத்தையும் அனுபவித்து மகிழ்ந்தனர் செக்கரியாவும் எலிசபெத்தும். முதிர் வயதில் திருமுழுக்கு யோவானைப் பெற்றெடுக்கிறார்கள். அவரும் தனது பிறப்பின் நோக்கத்தை அறிந்து 'மனம் மாறி திருமுழுக்கு பெறுங்கள்' என்றும் எனக்குப் பின் ஒருவர் வருகிறார்; அவரின் மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்றும் மிகவும் துணிவுடன் இயேசுவை முன்னறிவிக்கின்றார். அரசனின் தவறுகளைக் கூடச் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. நாமும் திருமுழுக்கு யோவான் போல இறை அழைப்பிற்கேற்ற பாதையில் பயணிப்போம். நமது வாழ்வினை வருத்தமடையச் செய்யும் செயல்களை, சவால்களை இறைத்துணையுடன் எதிர்கொள்வோம்.      சாதிக்கத் துணிந்தவனிடத்தில் சவால்கள் சாத்தியமாகிவிடும்.   ...

இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா, 22 June 2025

படம்
  இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா 22 June 2025 திருப்பலி முன்னுரை "அவர் பலியாகப் படைத்த இரத்தம், அவரது சொந்த இரத்தமே. இதனால் கிறிஸ்து, நமக்கு என்றுமுள்ள மீட்புக் கிடைக்கும்படி செய்தார்."       உலகம் உயிர்ப்புடன் இயங்க தன் உயிரைத் தானமாய் தந்து இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை இன்று அன்னையாம் திரு அவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது.      உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்க தனது உடலையே உணவாகத் தந்து தனது ரத்தத்தை உயிர் வாழ உதவும் பானமாகத் தந்த இயேசுவின் பேரன்பை நினைத்து இன்று அன்னையாம் திரு அவை விழா எடுக்கின்றது. ஆம், தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப் போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திருஇரத்தம் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. நம்மை எவ்வாறு பிறருக்கு பகிர்ந்து கொடுப்பது ? நமது திறமைகளை, நமது உழைப்பை நமது நேரத்தை நமது பணத்தை நமது நல்ல மனதை பிறருக்கு தாராளமாய் தந்து உதவுவதன் மூலம் ...