புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா பெருவிழாத் திருப்பலி

 புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா பெருவிழாத் திருப்பலி 



திருப்பலி முன்னுரை


பிரியமானவர்களே! திருஅவையின் தலை சிறந்த தூண்களான புனிதர்கள் பேதுரு, பவுல் இவர்களின் திருவிழாவை கொண்டாட திருஅவை இன்று நமக்கு அழைப்பு தருகின்றது.

பேதுரு தன் இனமக்களுக்கும், பவுல் பிறஇன மக்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள். இரு வேறு குணநலன்களை கொண்டிருந்தாலும், தங்களது ஆர்வத்தில் குறைவில்லாது இவர்கள் பணியாற்றி வந்தார்கள் என்பதனை இறைவாக்குகள் நமக்கு உறுதி செய்கின்றன.

இருவருமே தங்களது நிலையுணர்ந்து கொண்டதால், நீரே மெசியா என்றும், அவரே என்னிலே வாழ்கின்றார் என்றும், அவரது வலிமையை பெற்றே நாங்கள் வலிமை பெறுகின்றோம் என்று உறுதியாக சொல்ல முற்பட்டார்கள்.

தங்களது விசுவாச உறுதிப்பாட்டை மடல்களின் வாயிலாகவும் நம்மோடு பேசி வருகின்றார்கள்.

இந்த பெருவிழாவிலே நாமும், கிறிஸ்து இயேசுவின் வலிமை உணர்ந்தவர்களாக, அவருக்கு நன்றியறிந்த நல்ல வாழ்வு வாழ அருள் கேட்டு மன்றாடுவோம்.

மன்றாட்டுகள்


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. திருஅவை அன்பர்கள் இந்த புனிதர்களில் இருந்த துணிவு பெற்றவர்களாக தங்களது பணியினை ஆற்ற அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நாட்டை ஆள்வோர் அதிகாரத்தை மட்டுமே நம்பி பயணிக்காமல், அன்பையும், பரிவையும், கரிசனையையும் கொண்டு பணியாற்ற அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பேதுருவின் கூற்றுப்படி, கடவுள் ஆள்பார்த்து செயல்படாதவர் என்பதனை நாங்களும் உணர்ந்து, வாழ்விலே வாழ்ந்து காட்டிட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பவுல் அடிகளாரின் கூற்றுப்படி, என்னிலே வாழ்வது அவர் என்று உணர்ந்து உயிருள்ள ஆலயங்களாக வாழ்ந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. வாழும் கடவுளின் மகன் நீரே என்பதனை உணர்ந்து, இறுதிவரை நம்பிக்கையிலே நிலைத்து நின்று வாழ்ந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு)