இடுகைகள்

Prayers for Special Occasions (நிகழ்வுகளுக்கான பிரார்த்தனனகள்)

படம்
  Prayers for Special Occasions  நிகழ்வுகளுக்கான பிரார்த்தனனகள் Click here to download   - English Click here to download   - Tamil

பொதகாலம் 14-ஆம் ஞாயிற்றுக்கிழமை (மூன்றாம் ஆண்டு)

படம்
பொ து காலம் 14-ஆம் ஞாயிற்றுக்கிழமை (மூன்றாம் ஆண்டு) வாசகங்கள்:  எசாயா 66:10-14c திருப்பாடல்கள் 66:1-7, 16, 20 கலாத்தியர் 6:14-18  லூக்கா 10:1-12, 17-20 மறையுரை: கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,      இன்றைய நற்செய்தி ஒரு அழகான மற்றும் சவாலான தருணத்தை நமக்கு அளிக்கிறது: இயேசு எழுபத்திரண்டு சீடர்களை தமக்கு முன்னால் அனுப்புகிறார். இருவர் இருவராக, அவர் செல்ல நினைத்த நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு.      இயேசு அவர்களுக்கு ஒரு பணியைக் கொடுக்கிறார்: " அறுவடை மிகுதி, ஆனால் வேலையாட்கள் குறைவு." அவர் அவர்களை கடவுளின் துறையில் வேலையாட்களாக அழைக்கிறார் - சமாதானத்தின் தூதர்கள் மற்றும் கடவுளின் இறையரசை அறிவிப்பாளர்கள். பணிக்கு அனுப்பப்படுதல்:      முதலில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இயேசு அவர்களை ஜோடிகளாக அனுப்புகிறார். நமது கிறிஸ்தவப் பணி தனிமையான பணி அல்ல என்பதை இது நினைவூட்டுகிறது. நாம் ஒன்றாகப் பயணிக்கவும், ஒருவரையொருவர் ஆதரிக்கவும், சமூகத்தின் சக்திக்கு சாட்சிகளாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். பங்கு என்பது ஒரு நிறுவனம் மட்...

பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு)

படம்
  பொதுக்காலம் 14ஆம் வாரம் ஞாயிறு  மூன்றாம் ஆண்டு திருப்பலி முன்னுரை           இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று பொதுக்காலம் 14ம் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.           என் இறைவா! என் இதயம் உம்மில் அன்றி வேறு யாரிடம் அமைதி பெறும் என்கிறார் புனித அகுஸ்தினார். 'நிறை அன்பை அளிக்கும் தாயினும் மேலாக நான் உங்களைத் தேற்றுவேன்' என்ற இறைவார்த்தையையும் ஆறுபோல் நிறைவாழ்வு பெருக்கெடுக்கும் என்ற இறையன்பை ஆழமாக உணர்ந்தவர் புனித தோமா.           அறிவில் வளம்பெற, உறவு உரம்பெற, ஆன்மீகம் ஆழம் காண கேள்விகள் அவசியமானது, உறுதி செய்ய வழிகோலுகின்றது.      இன்றைய அருள்வாக்கு வழிபாடு அமைதியைப் பற்றிப் பேசுகின்றது. அமைதி என்பது கடவுளின் கொடை. எந்த வீட்டிற்குச் சென்றாலும் அங்கு அமைதி உண்டாகுக என்று வாழ்த்த பணிக்கிறார் இயேசு. 'கிறிஸ்துவை நம்பும் ஒவ்வொருவருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக' என்கிறார் புனித பவுல். சீடர்களாக...

புனித தோமா திருத்தூதர் (ஜூலை 03)

படம்
புனித தோமா திருத்தூதர்  (ஜூலை 03) திருப்பலி முன்னுரை      இந்தியாவின் திருத்தூதரான திருத்தூதர் தோமாவின் பெருவிழாவை இன்று இந்திய கத்தோலிக்கத் திரு அவை அக்களிப்புடன் கொண்டாடி மகிழ்கிறது. 1950 ஆண்டுகளுக்கு முன்பு, கிமு 52-ல், இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் கால்பதித்து, இன்றைய தமிழகம் மற்றும் கேரளாவின் இயேசுவைப் பறைசாற்றி, அவர்தம் விசுவாச அறிக்கையான "என் ஆண்டவரே! என் தேவனே!" என்ற அடிச்சுவட்டில் உயிர்ப்புக்குச் சான்று, நற்செய்தி அறிவித்து, இறுதியில் சென்னையிலுள்ள புனித தோமையார் மலையில் மறைச்சாட்சியாக 1972-ல் தமது இன்னுயிரையும் ஈந்து சான்று பகர்ந்தவர் திருத்தூதர் புனித தோமையார். இதோ. என் கைகள் என்று சொன்ன ஆண்டவரின் காயங்களில் தன் விரல்களைப் பதிந்து. அவர்தம் உயிர்ப்பிற்குச் சான்று பகர்ந்த அவர், "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" என்று ஒற்றை வரியில் தன் விசுவாசத்தை அறிக்கையாக வெளியிடுகின்றார்.       தொடக்கத் திரு அவையில் புனித தோமாவின் உயிர்ப்பு அனுபவமே மிகப்பெரிய மூலதனமாகவும் மூல ஆதாரமாகவும் அமைந்தது. நாமும் செல்வோம். அவரோடு இறப்போம் (யோவா 11: ...

தூய மரியன்னையின் திரு இருதயம் (Immaculate Heart of Mary)

படம்
  தூய மரியன்னையின்  திரு இருதயம் திருப்பிலி முன்னுரை      மரியாவின் மாசற்ற இதயத்தின்மீது அளவுகடந்த இறைப்பற்றும், அன்பும் கொண்ட இறைகுலமே, கருவிலே கறையொன்றில்லா கன்னி மரியாவின் பெருமையின் அடிப்படையில் தோன்றியதுதான் மரியாவின் மாசற்ற இதய பக்தி. பாத்திமாவில் மரியா தந்த காட்சியில், 'என் மாசற்ற இதயம் வெற்றி பெறும்" என்று முன்னறிவித்தார். எனவே, இது போராட்டத்தின் நேரமல்ல, மன்றாட்டின் நேரம். மரியன்னையின் மாசற்ற இதய பக்தியை என் இதய பக்திக்கு இணையாக வைக்க நான் விரும்புகிறேன்" என்று பாத்திமா செய்தியில் குழந்தை இயேசு வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். லூசியாவிடம் மரியா பேசியதாவது, ''என் மகள் லூசியாவே, முட்களால் சூழப்பட்ட என் இதயத்தைப் பார். மீட்புக்குத் தேவையான அனைத்து அருளையும் பெற ஐந்து முதல் சனிக்கிழமைகளில் மறையுண்மைகளை தியானித்து முழு செபமாலையை என்னுடன் சேர்ந்து ஒப்புக்கொடுப்பாயா" என்று கேட்டிருக்கிறார். அந்த முட்களை ஒவ்வொன்றாக அகற்றி அக்காயத்தை நம் அன்பினால் ஆற்ற வேண்டும்.      நம் ஒவ்வொரு நினைவும், சொல்லும், செயலும் அதற்கு ஏற்றதாய் அமையவேண்டும். பாத்திமாவில...

புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா பெருவிழாத் திருப்பலி

படம்
  புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா பெருவிழாத் திருப்பலி  திருப்பலி முன்னுரை பிரியமானவர்களே! திருஅவையின் தலை சிறந்த தூண்களான புனிதர்கள் பேதுரு, பவுல் இவர்களின் திருவிழாவை கொண்டாட திருஅவை இன்று நமக்கு அழைப்பு தருகின்றது. பேதுரு தன் இனமக்களுக்கும், பவுல் பிறஇன மக்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள். இரு வேறு குணநலன்களை கொண்டிருந்தாலும், தங்களது ஆர்வத்தில் குறைவில்லாது இவர்கள் பணியாற்றி வந்தார்கள் என்பதனை இறைவாக்குகள் நமக்கு உறுதி செய்கின்றன. இருவருமே தங்களது நிலையுணர்ந்து கொண்டதால், நீரே மெசியா என்றும், அவரே என்னிலே வாழ்கின்றார் என்றும், அவரது வலிமையை பெற்றே நாங்கள் வலிமை பெறுகின்றோம் என்று உறுதியாக சொல்ல முற்பட்டார்கள். தங்களது விசுவாச உறுதிப்பாட்டை மடல்களின் வாயிலாகவும் நம்மோடு பேசி வருகின்றார்கள். இந்த பெருவிழாவிலே நாமும், கிறிஸ்து இயேசுவின் வலிமை உணர்ந்தவர்களாக, அவருக்கு நன்றியறிந்த நல்ல வாழ்வு வாழ அருள் கேட்டு மன்றாடுவோம். மன்றாட்டுகள் பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 1. திருஅவை அன்பர்கள் இந்த புனிதர்களில் இருந்த துணிவு பெற்றவர்களாக...