புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா பெருவிழாத் திருப்பலி திருப்பலி முன்னுரை பிரியமானவர்களே! திருஅவையின் தலை சிறந்த தூண்களான புனிதர்கள் பேதுரு, பவுல் இவர்களின் திருவிழாவை கொண்டாட திருஅவை இன்று நமக்கு அழைப்பு தருகின்றது. பேதுரு தன் இனமக்களுக்கும், பவுல் பிறஇன மக்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள். இரு வேறு குணநலன்களை கொண்டிருந்தாலும், தங்களது ஆர்வத்தில் குறைவில்லாது இவர்கள் பணியாற்றி வந்தார்கள் என்பதனை இறைவாக்குகள் நமக்கு உறுதி செய்கின்றன. இருவருமே தங்களது நிலையுணர்ந்து கொண்டதால், நீரே மெசியா என்றும், அவரே என்னிலே வாழ்கின்றார் என்றும், அவரது வலிமையை பெற்றே நாங்கள் வலிமை பெறுகின்றோம் என்று உறுதியாக சொல்ல முற்பட்டார்கள். தங்களது விசுவாச உறுதிப்பாட்டை மடல்களின் வாயிலாகவும் நம்மோடு பேசி வருகின்றார்கள். இந்த பெருவிழாவிலே நாமும், கிறிஸ்து இயேசுவின் வலிமை உணர்ந்தவர்களாக, அவருக்கு நன்றியறிந்த நல்ல வாழ்வு வாழ அருள் கேட்டு மன்றாடுவோம். மன்றாட்டுகள் பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 1. திருஅவை அன்பர்கள் இந்த புனிதர்களில் இருந்த துணிவு பெற்றவர்களாக...